Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Featured Posts

Sunday, July 27, 2025

நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை

ஜெர்மனியில் நடைபெற்ற யோக மாநாட்டில் தான் முதன்முதலில் ‘ஐயங்கார் யோகா’ என்ற பெயர் கேட்டேன். திராவிட பூமியில் வாழும் எனக்கு உடனடியாக ஒரு புரட்சி மோடில் சிந்தனை உருவானது. ‘ஐயங்கார் யோகா’ என்றால் பிற ஜாதியினருக்கும் தனித்தனி யோகா இருக்கிறதா? எங்கே சமத்துவம்? எங்கே சமூக நீதி? என்று கார்ல் மார்க்ஸ் பிறந்த பூமியில் நின்று கேள்விகள் எழுப்பினேன்.

பின்னர் தான் தெரிந்தது, யோக முறையில் பி. கே.எஸ். ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகை யோகா தான் ‘ஐயங்கார் யோகா’.

ஐயங்கார் யோகாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, யோக மரபின் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். யோக மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் நிலவி வரும் ஓர் ஆன்மீக மரபு. இதில் பல்வேறு யோக முறைகள் அடங்கும். இராஜ யோக மரபில் அஷ்டாங்க யோகத்தில் உள்ள ஆசனங்கள், ப்ராணாயாமம் போன்றவை நாத பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்டவை. மச்சீந்தர நாதர் மற்றும் கோரக்க நாதர் பல நூல்களை எழுதி ஹத யோக மரபை உருவாக்கினார்கள். ஹத யோக ப்ரதீபிகா என்ற நூலை ஸ்வாத ராமா (ராமநாத்) என்ற நாத வழி அறிஞர் எழுதியவர். இன்று வரை கோரக்கர் மற்றும் ஸ்வாதராமரின் நூல்களே ஹத யோகத்திற்கு ஆதாரமாக உள்ளன. தமிழில் ‘திருமந்திரம்’ ஹத யோகத்தைப் பற்றிச் சொல்லும் முக்கிய நூலாகும். இதில் மூன்றாம் தந்திரம் யோக மரபுகளுக்கான ஆதார நூலாக இருக்கிறது. அதில் ஹத யோக முறைகளும் விளக்கப்படுகின்றன.

முந்தைய யோக நூல்களில் எதிலும் ‘யோகம் இவ்வகை நோயை தீர்க்கும்’ என கூறப்படவில்லை. ஹத யோகம் ஆன்மீக உயர்வுக்கான கருவியாகவே விளக்கப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் யோக முறை பல நவீன பாய்ச்சல்களை சந்தித்தது. ‘மாடர்ன் யோகா’ என்ற பெயரில் தனது மரபை மாற்றிக்கொண்டு, ஹத யோகத்தின் முக்கிய உறுப்புகளான ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா மற்றும் பந்தா ஆகியவற்றில், ஆசனம் மற்றும் ப்ராணாயாமத்தையே முன்னிறுத்தி பயிற்சிகள் அளிக்கபட்டன. இவ்வாறான நவீன யோக மரபுகள் முக்கியமாக எதை மறைத்தது என்றால் கோரக்கர் மற்றும் நாத பாரம்பரியத்தால் ஹத யோகம் தோன்றியது என்ற வரலாற்றை தான்.

இன்று ஹத யோகத்தை பயிலும் பெரும்பாலானவர்களுக்கு கோரக்க நாதர் மற்றும் அவர் எழுதிய முதல் யோக நூல் பற்றிய தகவலே தெரியாது.

நவீன யோக மரபினர் யோகத்தின் தந்தையாக பதஞ்சலியை குறிப்பது வழக்கம். யோக சூத்திரம் போன்ற நூல் மூலம் அவர் தன் பங்களிப்பை செய்திருக்கலாம். ஆனால் அவர் கூறும் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்ற வரிகளில் ஆசனம் ஸ்திரமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் ஆசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை ஆசனங்கள் உள்ளன என்பதற்கான வழிகாட்டுதல் யோக சூத்திரத்தில் இல்லை. ஏற்கனவே ஹத யோக ப்ரதீபிகா போன்ற நூல்கள் இருந்ததால், பதஞ்சலி அவற்றைப் பற்றிக் கூற தேவையில்லை என்று எண்ணியிருக்கலாம்.

பகவத் கீதையிலும் யோக சூத்திரத்திலும் ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. ஆனால் ஹத யோகத்தை முறையாக விளக்கியவர் கோரக்க நாதர். எனவே ஹத யோகத்திற்கு தந்தை கோரக்கர் தான் எனலாம்.

நாத சம்பிரதாயத்தில் இயங்கும் எனக்கு நவீன யோக மரபில் ஏற்க இயலாத அம்சங்கள் பல உள்ளன. குறிப்பாக கோரக்கர், திருமூலர் போன்றவர்களை முற்றிலுமாக மறந்துவிட்டு, யோகத்தை சிகிச்சை பொருளாக மாற்றிவிட்டது முக்கிய குறைபாடாக உள்ளது.

“பச்சிமுகத்தாசனம் செய்தால் முதுகெலும்பு வலி போகும்”, “ப்ராணாயாமம் செய்தால் மன உளைச்சல் குறையும்” போன்ற சிகிச்சை நோக்குடன் யோக முறை விளக்கப்படுவது எனக்கு ஒத்துவராதது. சிகிச்சை நோக்கில் ஆசனம் செய்யப்படுவதால், ஆசனத்தின் உண்மை தன்மை குறைந்து விடுகிறது. இது காயகல்ப மூலிகையை பசிக்கு உணவாக கொடுப்பதைப் போன்றது.

இப்போது கூட ‘முத்திரை செய்தால் நோய் குணமாகும்’ என்ற வகையில் யோக முறைகள் பரப்பப்படுகின்றன. ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாழ்வியல் முறையாக செயல்படுத்தினால், அது அறியாமையால் ஏற்படும் துன்பங்களை போக்கும். அறியாமையை களைந்தால் ஆனந்தம் உருவாகும் — இவ்வளவுதான் யோகத்தின் கருத்து.

“கடன் தீர ஆசனம்”, “காதல் கைகூட ஆசனம்”  என யாராவது சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறதோ, அதே போலவே “வியாதி தீர ஆசனம்” என்பதும் அத்தகைய விஷயமே என்பது என் கருத்து.

நாள்பட்ட நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு யோக பயிற்சியாளர் ஒருவர் தீர்வு கூறிக்கொண்டே இருந்தாலும், அதே நபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது - யோகம் என்பது நோய் தீர்க்கும் கருவி அல்ல, அது அறியாமையை போக்கும் ஒரு உள்பார்வைக் கருவி.

இத்துடன் விட்டார்களா ? மேலைநாடுகள் “பீச் யோகா”, “பீர் யோகா” என பல வியத்தகு பெயர்களில் யோகத்தைத் தங்களுக்கே உரியதுபோல் மாற்றுகின்றனர். நம் நாட்டிலும் பலர் “வாட்ஸ்அப் யோகா”, “இன்ஸ்டாகிராம் யோகா” என மரபை சீர்குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எனினும், நவீன யோக மரபிலும் சில முக்கியமான வைரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள கைவல்ய தாம் என்ற நிறுவனம் மற்றும் ஐயங்கார் யோகா ஆகியவை ஹத யோக மரபை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி வரும் சிறந்த நிறுவனங்களாகும். முக்கியமாக ஹத யோக பயிற்சியை உலகளவில் பரப்பியவர் பி. கே.எஸ். ஐயங்கார்.

சமீபத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் பி. கே.எஸ். ஐயங்கார் எழுதிய நூலை தமிழில் ‘நலம் தரும் யோகம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த நூலை வாசித்து கருத்து சொல்ல கேட்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் பட்டு நெசவாளியிடம் பிகினி உடையைப் பற்றி கருத்து கேட்பது போல தான் - நான் இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதும்..! இருந்தாலும் ஹத யோக குடும்பத்தின் கீழ் வருவதால், என் கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

ஆங்கில நூலை பல வருடங்களுக்கு முன்பே வாசித்தேன். முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த தமிழ் நூல் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசனங்கள் செய்வது எப்படி என்பதையும், ப்ராணாயாமம் முறையையும் தெளிவாகக் கூறியுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹத யோக ஆசிரியர் ஒருவரிடம் ஆசனங்கள், ப்ராணாயாமம் கற்றுக்கொண்ட பிறகு, இந்நூல் பயிற்சியாளராக ஆசனங்களை மேலும் துல்லியமாக செய்ய உதவும். தமிழ் ஹத யோக வாசகர்களுக்கான அரிய நூல் இது.


புத்தகம்: நலம் தரும் யோகம்

வெளியீடு: காலச்சுவடு
விலை: — 295 ரூபாய்

Monday, April 28, 2025

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை : வேதகால ஞானத்தின் நவீனப் பயணம்

பழமையான வேதகால அறிவையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் இன்றைய வாழ்வியலோடு இணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் தலைமையில், இந்த அறக்கட்டளை ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால வாழ்வியல் முறைகளை பரப்பி வருகிறது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இயங்கும் இந்த அமைப்பு, ஆன்மீகத்தையும் நடைமுறை வாழ்வையும் இணைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.


ஜோதிடம்: விதியை அறியும் விஞ்ஞானம்

ஜோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு பழமையான அறிவியல். ப்ரணவ பீடம், இந்த அறிவியலை ஆழமாகவும், பயன்பாட்டு முறையிலும் கற்பிக்கிறது.

சிறப்புப் பாடத்திட்டங்கள்:

  • அடிப்படை ஜோதிடம் (வேதகால ஜோதிடம், நாடி, உயர் நட்சத்திர ஜோதிடம்)

  • சிறப்பு ஜோதிடத் துறைகள்:

    • மருத்துவ ஜோதிடம் (நோய்களுக்கான கிரக பலன்கள்)

    • வேளாண் ஜோதிடம் (பயிர்களுக்கான சரியான நேரம்)

    • பங்குச்சந்தை ஜோதிடம் (பொருளாதார முன்னறிவிப்புகள்)

  • நாடி ஜோதிடம், ஜெய்மினி ஜோதிடம் போன்ற பாரம்பரிய முறைகள்

இங்கு பயின்ற மாணவர்கள், ஜோதிடத்தை ஒரு தொழிலாகவும், ஆன்மீகப் பயணமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.


யோகம் சாஸ்திரம்: உடல், மனம், ஆத்மாவின் ஒருங்கிணைப்பு

யோகம் என்பது பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் வழியாக ஆன்மீக உயர்வை நோக்கிய ஒரு பயிற்சி. ப்ரணவ பீடம், நாத சம்பிரதாயத்தின் அடிப்படையில், கோரக்க நாதர் மரபைப் பின்பற்றி ஹத யோகம் கற்பிக்கிறது.

யோகப் பயிற்சிகள்:

  • ஹத யோகம் (உடல் வளைவு திறன் மற்றும் மன உறுதி)

  • பால யோகம் (குழந்தைகளுக்கானது)

  • ஸ்ரீ யோகம் (பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்)

  • கர்பகால யோகம் (கர்ப்பிணிப் பெண்களுக்கானது)

யோக ஆசிரியர் பயிற்சி:

  • ஒரு மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட பயிற்சிகள்

  • ஹத யோகம், நாத யோகம், தத்ரா யோகம்

இந்தப் பயிற்சிகள், யோகத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற உதவுகின்றன.


நாத கேந்திரா: வேதகால வாழ்வியல் 

2017-ல் உருவாக்கப்பட்ட நாத கேந்திரா, வேதகாலத்தின் தற்சார்பு மற்றும் ஆன்மீக வாழ்க்கை முறையை மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய திறன் பயிற்சிகள்

வேதகால வேளாண்மை (இயற்கை விவசாயம்)
சூரிய ஒளி மின்சாரம் (சூரிய ஆற்றல் பயன்பாடு)
வேதகால உணவுமுறை (ஆரோக்கியமான உணவுகள்)
கணினி தொழில்நுட்பம் 
தியானம் & ஆன்மீக வளர்ச்சி

இங்கு, ஆன்மீகம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்து, தற்காலத்திற்கான முழுமையான வாழ்வியல் அமைகிறது.

 ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் பயிற்சி விவரங்கள்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை, ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால அறிவை ஒருங்கிணைத்து, மனிதர்களை உள்ளார்ந்த ஆன்மீக வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிறது. நாத கேந்திரா போன்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழல் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க உதவுகின்றன. மனிதன் தன்னை உயர்மனித நிலைக்கு மேம்படுத்த இத்தகைய சூழல் உதவுகிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் அனைத்து பயிற்சிகளும் நாத கேந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழலில் நடைபெறுகின்றன. கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் நகர அலுவலகத்திலும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதன் கன்யாகுமரி கிளையிலும் ஜோதிடம் மற்றும் யோகம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய பயிற்சிகளை மதம், இனம், வயது, ஆண்-பெண் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கற்றுக்கொள்ளலாம். கல்வியில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்குமானது இப்பயிற்சிகள். நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

மாதாந்திர பயிற்சி அமைப்பு:

  • மாதத்தின் முதல் வாரம்: சிறப்பு ஜோதிட பயிற்சிகள்

  • இரண்டாம் வாரம்: திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

  • மூன்றாம் வாரம்: ஆன்மீகப் பயிற்சிகள்

வருடம் முழுவதும் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு முறை நடைபெறும் பயிற்சி மீண்டும் நடைபெறுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். சில சிறப்புப் பயிற்சிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றன. முழு வருடத்திறகான பயிற்சி அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது

யோகா வித்யா – பயிற்சி திட்டங்கள்

  • 1 மாத யோகா பயிற்சி – அக்டோபர்

  • 6 மாத யோகா பயிற்சி – ஜூலை

  • 1 வருட யோகா பயிற்சி – டிசம்பர்

சிறப்பு யோகா பயிற்சிகள்

  • ஹத யோகா2 மாதங்களுக்கு ஒருமுறை

  • பால யோகா (குழந்தைகளுக்கான யோகா)ஏப்ரல் / மே மாதம்

பயிற்சியில் இணைவதற்கு வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் எண் - 9944 1 333 55, 9944 2 333 55.

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com 

 

 

 


Monday, March 24, 2025

இலவச ஜோதிட பயிற்சி - ஸ்வாமி ஓம்கார் ஜோதிட வகுப்புகள்

நமது கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று ஜோதிடம். ஒரு தனிமனிதன் உணவு, உறைவிடம் மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அடைந்த பின்னர், தனக்குக் கிடைத்த வசதிகள் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தருணத்தில்தான் ஜோதிடத்தின் தேவை உருவாகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, நமது கலாச்சாரம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, கலை மற்றும் கலாச்சார உயர்வில் திளைத்திருந்தது.அக்காலத்தில் ஜோதிடம் ஒரு செழிப்பான சாஸ்திரமாக விளங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில், ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கான நோக்கம் பலருக்கு இல்லாமல் போனது. ஆனால், மக்களின் தேவைகள் ஓரளவு பூர்த்தியான பின்னர், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.


ஜோதிடம் என்றும் நிலைத்திருக்கும் ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு ஜோதிடக் கல்வி என்பது அன்னியமாகவே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கும் வசதிகள் இல்லாத நிலை நீடித்தது.


கடந்த 25 ஆண்டுகளாக, ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை ஜோதிடப் பயிற்சியை வழங்கி வருகிறது. இனம், நிறம், பாலினம் போன்ற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது.


ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று, ஜோதிடத்தைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்கள் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்று, ஜோதிடத்தைப் பரப்பி வருகின்றனர்.
 

ஜோதிட அடிப்படைப் பயிற்சி கடந்த சில வருடங்களாக நேரடிப் பயிற்சியுடன், ஆன்லைன் பயிற்சியும் நடைபெறுகிறது. யூடியூப் தளத்தில் அனைத்து வகையான அடிப்படை ஜோதிடப் பயிற்சிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.
யூடியூப் சேவையின் மூலம், நீங்கள் ஜோதிடப் பயிற்சியைப் பெற விரும்பினால், உங்கள் இடத்தில் இருந்தே ஆழமான ஜோதிடப் பயிற்சியைப் பெற முடியும். அதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்:
 

உயர் நட்சத்திர ஜோதிடம் - பன்னிரண்டு வகுப்புகள் (YouTube Link)

 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12


ஜோதிட அடிப்படைப் பயிற்சியில், கிருஷ்ண மூர்த்தி பத்ததி என்ற ஜோதிட முறையும், நாடி ஜோதிட முறையான சாயா நாடியும் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
 

நாடி ஜோதிட முறையான சாயா நாடி ஜோதிடப் பயிற்சி, ஆழ்ந்த ஜோதிட அறிவு இல்லாதவர்களுக்கும் எளிமையாகக் கற்று பலன் கூறுவதற்கு உதவுகிறது. அதிகமான சூட்சமங்கள் இல்லாமல் பலன் கூறும் தன்மையே சாயா நாடியின் சிறப்பம்சமாகும்.
 

சாயா நாடியைக் கற்றுக்கொள்ள, யூடியூப் இணைப்பை இங்கே தருகிறேன்:
 

சாயா நாடி ஜோதிடப் பயிற்சி - YouTube Link
 

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

மூன்று வீடியோக்களில் நீங்கள் முழுமையாக சாயா நாடியைக் கற்று, பலன் கூறும் திறனைப் பெற முடியும். அடிப்படை ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, தனித்துவமான துறைகளில் ஜோதிடத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர் வகுப்புகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவராக இருந்தால், அடிப்படை ஜோதிடம் படித்த பிறகு, மருத்துவ ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டு, உங்கள் துறையில் ஜோதிடத்தைப் பயன்படுத்தலாம்.


ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை வழங்கும் உயர் துறை சார்ந்த ஜோதிட வகுப்புகளின் தலைப்புகளை இங்கே தருகிறேன்

 

  1. மருத்துவ ஜோதிடம்
  2. முண்டேன் ஜோதிடம்
  3. பங்குசந்தை ஜோதிடம்
  4. ஆன்மீக ஜோதிடம்
  5. கட்டடக்கலை ஜோதிடம்
  6. கேரள ஜோதிடம்
  7. கல்வியியல் ஜோதிடம்
  8. முஹூர்த்த ஜோதிடம்
  9. திருமணப் பொருத்தம்
  10. பிரசன்ன ஜோதிடம்
  11. வேளாண்மை ஜோதிடம்
  12. தொழில் முறை ஜோதிடம்
  13. உயர்நிலை ஜோதிடம்

அடிப்படை ஜோதிடம் கற்ற பிறகு, உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து, நேரடி அல்லது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் தகவல்களை எங்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணைந்து தெரிந்துகொள்ளலாம்.

 

ஜோதிட கூடல்
 

பயிற்சி முடிந்த பிறகும், ப்ரணவ பீடம் அறக்கட்டளை நடத்தும் ஞாயிறு ஜோதிட கூடல் என்ற ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த ஜோதிட கூடல், கற்று முடித்த மாணவர்களுக்கான கூட்டமாகும். இதில் ஜாதக ஆய்வு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஞாயிறு ஜோதிட கூடல் என்பது முற்றிலும் இலவசமாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் எந்தவித இணைய கட்டணங்களும் இல்லை. இந்த ஜோதிட கூடல் நிகழ்வு கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


உயர் வகுப்புகள் மற்றும் அடிப்படை வகுப்புகளில் கலந்துகொள்ளவும், அது பற்றிய தகவல்களைப் பெறவும், டெலிகிராம் மூலம் எங்களுடன் இணையுங்கள்.

* டெலிகிராம் குழு *

ஏப்ரல் 2025 முதல் பல்வேறு ஜோதிடப் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. உங்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சிறந்த ஜோதிடப் பயிற்சி முறைகள் வழியாக, ஜோதிட சாஸ்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

Friday, November 22, 2024

மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு

 

மஹா கும்பமேளாவிற்கு வருகை தருவதற்கு பலர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். முன்பு முன்பதிவு செய்த ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பமேளா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் திருயாத்திரை குழுவினர் முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். 

மஹா கும்பமேளா யாத்திரைக்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல் புத்தகத்தை படித்து உங்களின் விருப்பமான நாட்களை தேர்வு செய்யவும். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடக்க உள்ளதால் அதன்படி உங்களின் பயணத்தை தேர்வு செய்யவும். 

மேலும் தகவல் வேண்டும் என்றால் கையேட்டில் கொடுக்கப்பட்ட 

தத்த நாத் 98401 87486 | தாரா நாத் 98407 48890 ஆகியோரை தொடர்புகொள்ளவும்.


கும்பமேளா 2025 கையேடு 

 மஹா கும்பமேளா உங்களை ஆன்மீகத்துடன் வரவேற்கிறது.