Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திரோ பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Featured Posts

Wednesday, May 16, 2012

குழலினிது யாழினிது - பகுதி 4 +18


நம் உடலின் சமநிலை தவறுவதற்கு காரணம் நாம் தான் என கூறினேன் அல்லவா? அது எப்படி என காண்போம்.

ஊன் உடல் என்பது நம் நேரடியாக தொடர்புகொள்ளதக்க வகையில் இருக்கிறது. நம் உணவு மற்றும் உடை பழக்கம் ஆகியவை ஊன் உடம்பை நேரடியாக தாக்குகிறது.

பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் செயல்பாடுகள் இயந்திர கருவிபோல செயல்படுவதில்லை. இவை செயல்பட மனம், பிராணன் மற்றும் அறிவு உடல் முக்கிய பங்கை வகிக்கிறது.

நவீன மருத்துவத்தில் ஒருவரின் உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு என்பதை கண்டறிகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஏன் அது ஏற்றத்தாழ்வு அடைந்தது? அச்சுரபிகளை ஏன் இயல்பாக செயல்பட வைக்க முடியாதா என்ற ஆய்வுக்கு செல்லாமல், செயற்கையாக வெளியிலிருந்து ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது.

இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுதல், உடல் பருமன் அதிகரித்தல் என பல விளைவுகள். அதில் உச்சமாக மேலும் நம் உடல் சமநிலை தவறிவிடுகிறது. கருத்தரிப்பு மையங்களில் இவர்கள் ஹார்மோன் ஊசி செலுத்தும் முன் நம்மிடம் வாங்கும் கையெழுத்தில் பல அபாயங்கள் உண்டு என பலருக்கு தெரியாது. மருந்து தொழிற்சாலைகளின் வியாபாரமும் இதன் பின்புலத்தில் உண்டு.

ஹார்மோன்கள் நம் பிறக்கும் பொழுது இயற்கையாக இருந்தது. அவற்றை ஏன் செயற்கையாக உள் செலுத்த வேண்டும்? இயற்கையாக மீண்டும் உற்பத்தி செய்ய இயலாதா? என நாம் சிந்திப்பதில்லை.

உற்றார் உறவினர் கேட்கிறார்களே, குழந்தை இன்னும் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் கருத்தரிப்பு மையத்தில் என்ன சொல்லுகிறார்களோ அதை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனதை கொடுக்கிறது.

1977க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குழந்தை இன்மை இயல்பாக இருக்கிறது என்றேன் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு பிறகு தான் பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தில் நஞ்சை கலந்தோம்.

மேலும் குறிப்பிட்ட தானியங்களே விளைவிக்க துவங்கினோம். ரசாயனம் கொண்ட ஒரே வகை தானியத்தை உண்டு வந்ததால் நம் சந்ததியினர் மலட்டு தன்மை நோக்கி சென்றனர்.

குழந்தையின்மையை 30 சதவிகிதம் முடிவு செய்வது உணவு பழக்கம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம் ஊன் உடல் உணவால் ஆனது. அதை மேம்படுத்தவும் பிறப்புறுப்பின் செயல்கள் செறிவு பெறவும் உணவு பழக்கம் மிகவும் முக்கியம்.

அரிசி உணவு என்பது நம் கலாச்சார உணவு அல்ல. வருடத்திற்கு ஒரு முறை விழா காலத்தில் மட்டும் அரிசி சாப்பிட்ட நாம். இப்பொழுது தினமும் சாப்பிடுகிறோம். குறைந்த பட்சம் இருவேளை உணவில் அரிசி இருக்கிறது. விவசாயத்தில் அதிக நஞ்சு கொண்டு ஒருவாக்கப்படும் தானியம் அரிசி.

கம்பு, திணை, சோளம், பயிறு என பல்வேறு தானியம் கொண்ட உணவு முறையை இழந்துவிட்டோம். இவைகளை தினமும் உணவில் இணைத்தாலே நமக்கு ஹார்மோன் செயல்கள் மீண்டும் புத்துணர்வு பெறும். மேலும் குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை எல்லாம் நம் ஊன் உடலை பாதிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். உணவை சீராக்கினால் உடலை சீராக்கலாம்.

தினமும் நஞ்சு கலந்த உணவு உண்டு பிறகு குழந்தை இல்லை என சொல்லுவது யாருடைய தவறு?

ஊன் உடல் பாதிப்புக்கு உணவு மட்டுமல்ல உடையும்,பழக்க வழக்கமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

(கரு உருவாகும்)

Tuesday, May 8, 2012

குழலினிது யாழினிது - பகுதி 3 +18


உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்கிறார் திருமூலர். அவரின் வரிகளை கவனித்துப்பாருங்கள். உடம்பே ஆலயம் என கூறவில்லை. ஊன் உடம்பே என்கிறார். உடம்பு என்பது பல உண்டு. அதில் நாம் குழப்பம் கொள்ளக்கூடாது என்பதற்காக ஊன் உடம்பே என குறிப்பிட்டு எழுதுகிறார்.
நவீன நாகரீததில் இருக்கும் நமக்கோ ஊன் உடம்பை தவிர பிற உடல் பற்றிய புரிதல் இல்லை.

நமக்கு ஐந்து உடல் (கோஷங்கள்) இருப்பதாக கூறினேன் அல்லவா? இவை நமக்கு பஞ்ச பூதத்திலிருந்து தோன்றியது. ஒவ்வொரு உடலும் பஞ்சபூத தன்மையிலேயே செயல்படுகிறது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அன்ன மய கோஷம் (ஊன் உடல்) : பூமியில் உருவாகும் பொருட்களால் உருவான உடல் அன்னமய கோஷம். அன்னம் என்ற உணவு மூலம் வளர்ச்சி பெற்றது. பஞ்சபூதத்தில் மண் தன்மை கொண்டது.  நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே உடல் அன்னமய கோஷம் மட்டுமே. அதனால் நவீன மருத்துவம் இவ்வுடலை மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கிறது.

ப்ராண மய கோஷம் (சக்தி உடல் ) : பிரப்ஞ்ச ஆற்றலால் உருவான உடல். உடல் செயல்களுக்கும் மனச்செயல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. பஞ்சபூதத்தில் வாயுவின் தன்மையை கொண்டது. இவ்வுடலில் சக்தி குறைவதனால் உடல் உறுப்புக்கள் செயல்படாமல் ஸ்தம்பிக்கிறது. மின்சாரக்கருவிகள் போன்று ஊன் உடலை உருவகித்தால் ப்ராண உடலை மின்சாரமாக உணர முடியும்.

மனோமய கோஷம் (மன உடல் ) : எண்ணங்களினால் உருவான உடல். காலம் மற்றும் வாழ்க்கை தன்மைக்கு காரணமான உடல் இந்த மனோ உடல். பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது. மனம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணமாகிறது மன உடல்.

விஞ்ஞானமய கோஷம் (அறிவுடல்) : நம் அனுபவங்களின் தொகுப்பாகவும் அறிவு சார்ந்த செயல்களுக்கு காரணமாக இருப்பது விஞ்ஞான மயகோஷம். பஞ்ச பூதத்தில் நெருப்பின் தன்மையை கொண்டது.
நெருப்பை போன்று அறிவின் செயலை நன்மை, தீமையும் அதனால் ஏற்படும் விளைவையும் கொண்டு உருவாகிறது. ஞாபக மறதி மன நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இவ்வுடல் விளங்குகிறது.

ஆனந்த மய கோஷம் (ஆன்ம உடல்) : என்றும் எப்பொழுதும் பரமானந்த நிலையில் இருப்பதால் ஆனந்த மய கோஷம் என அழைக்கப்படுகிறது. பஞ்சபூதத்தில் ஆகாயத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மா பரிசுத்தனாம இறை நிலையின் பிரதியாக இருப்பதால் என்றும் ஆனந்த நிலையில் இருக்கிறது. ஆன்மா எப்பொழுதும் சம நிலை தவறுவதில்லை. ஆன்மா ஆன்மாவாகவே இருந்து பிற உடல்களின் செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.  

ஆனந்த மய கோஷத்தை தவிர பிற உடல்கள் சமநிலை தவறினாலோ, செயல்படாமல் போனாலோ வாழ்க்கை தன்மை பாதிக்கப்படுகிறது. குழந்தை இன்மை என்ற வகையில் பார்த்தால் ஊன் உடல் மற்றும் சக்தி உடல் இரண்டும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் விந்து உற்பத்திக்கு சக்தி உடல் (ப்ராண மய கோஷம்) காரணமாகிறது. அதனால் ப்ராண உடலில் ஏதேனும் குறை இருப்பின் இச்செயல்கள் தடைபடும். மனோமய கோஷமும் உடலுறவு செயல்களின் தன்மையை எண்ணங்களால் பாதிப்படைய செய்கிறது. 

நடைமுறையில் ஊன் உடலை மட்டும் முன்னிருத்தி ஹார்மோன் சிகிச்சை, ஐவிஆர் மற்றும் சோதனை குழாய் மூலம் கரு உற்பத்தி செய்யும் பொழுது குழந்தையின் ஊன் உடல் மட்டுமே நன்றாக இருக்கும். தாய் தந்தையரின் பிற உடல்களில் குறை இருப்பதால் பிறக்கும் குழந்தையும் அவ்வுடலின் பாதிப்புடன் பிறக்கும்.

பிறக்கும் பொழுது அனைத்து உடலும் நன்றாக இருக்கும் படியே பிறக்கிறோம். அப்படியானால் அவ்வுடல்களில் குறை ஏற்படுவதற்கும் சமநிலை தவறுவதற்கும் யார் காரணம்?

வேறு யார்? நீங்கள் தான்...!

(கரு உருவாகும்...)